திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.12.2021) மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள் தலைமையில் வங்கிகளின் மாவட்ட அளவிலான ஆய்வு குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ், இ.ஆ.ப., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி.என். அண்ணாதுரை, சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு. மு.பெ. கிரி (செங்கம்), திரு. பெ.சு.தி. சரவணன் (கலசப்பாக்கம்), திரு. ஒ. ஜோதி (செய்யார்), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. மு. பிரதாப், இ.ஆ.ப., திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் திருமதி. பெ. சந்திரா, மண்டல மேலாளர் இந்தியன் வங்கி திருவண்ணாமலை திருமதி. பத்மாவதி ஸ்ரீகாந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. ஆர். மணிராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திருமதி. பார்வதி சீனிவாசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.