செய்தி: தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை ஒட்டி 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் காவல் மேற்பார்வையாளர் பாட்டுல கங்காதர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் உள்ளனர்.