செய்தி: திருப்பத்தூரில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான TNTPT (U20-A35) T20 Premier League கிரிக்கெட் போட்டியானது நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான TNTPT (U20-A35) T20 Premier League கிரிக்கெட் போட்டியானது விஸ்டம் கல்லூரியின் உரிமையாளர் பிரபாகரன் மற்றும் அபிப்கான் அவர்களால் நடத்தப்பட்டு மூத்த ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், யுவராஜ் மற்றும் செல்வம் கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதியிலிருந்து சுரேஷ் பா. முத்தம்பட்டி மைதானத்தில் மிகவும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் தொடங்கப்பட்ட போட்டியானது ஏழு அணிகள் பங்கேற்று ஒவ்வொரு வாரத்தின் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களில் நான்கு போட்டிகள் கொண்டு நடைபெற்றது. இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அன்று முடிவடைந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *