உலக மகளிர் தினத்தையொட்டி டி.ஐ.ஜி.கயல்விழி தலைமையில் 500 மரக்கன்றுகளை பெண் காவலர்கள் நட்டனர்

தஞ்சாவூர். 10/03/2022=12=20am

உலக மகளிர் தினத்தையொட்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் டி.ஐ.ஜி.கயல்விழி தலைமையில் 500 மரக்கன்றுகளை பெண் காவலர்கள் நட்டனர்.       

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி டி.ஐ.ஜி கயல்விழி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா ஆகியோர் தலைமையில் 500 மகளிர் காவலர்கள் மா,கொய்யா, அரசு, வேம்பு, உள்ளிட்ட பயன்தரும் 500 மரக்கன்றுகளை நட்டனர்.       

தொடர்ந்து உலக மகளிர் தினம் இந்த ஆண்டின் கருத்தாக தடைகளை உடைத்தெறிவோம் என்பதை வலியுறுத்தும் வகையில் கண்ணாடியில் விரல்கள் ரேகையை பதிவு செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் நடந்த நிகழ்வில் ஒட்டுனர் பயிற்சி முடித்த ஆயுதப்படை பெண் காவலர்களுக்கு டி.ஐ.ஜி கயல்விழி ஓட்டுனர் உரிமம்  வழங்கினார்.                     

டி.ஐ.ஜி கயல்விழி ஓட்டுனர் உரிமம் பெற்ற ஆயுதப்படை பெண் காவலர்களிடம் வாகனங்களின்சாவிகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். தஞ்சை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வான மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திராவிற்கு அதற்கான சான்றிதழைய வழங்கி சிறப்பாக பணியாற்றிய காவல் கண்காணிப்பாளரின் தனி படைக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் டி.ஐ.ஜி கயல்விழி. காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள்,காவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *