சேலம் மலபார் கோல்ட் டைமண்ட் கிளையின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

12/01/2022

சேலம் மலபார் கோல்டு டைமண்ட் கிளையின் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் 493 பேருக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ 5000 வீதம் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு மலபார் குழுமம் சார்பாக ரூ 24 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் வணங்கினார்கள்.
மேலும் சேலம் கிளையின் சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் 900 பேருக்கு தலா ரூ 5000 வீதம் ரூ 45 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்வில் மலபார் கோல்டு டைமண்ட் தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நெளவ்ஷாத், சேலம் கிளை தலைவர் பிரபு ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *