சோளிங்கரில் முதியோர்களுக்கு உதவித் தொகை வழங்கும் ஆணை

11/01/2022

சோளிங்கரில் முதியோர்களுக்கு உதவித் தொகை வழங்கும் ஆணையை முனிரத்தினம் எம்.எல்.ஏ வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் மோட்டூரில் வருவாய் துறை சார்பில் முதியோர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் ஒன்றிய தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார்.

கிராம நிர்வாக அலுவலர் ராகசுதா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கொடைக்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள 11 முதியோர்களுக்கு உதவிதொகை பெறும் ஆணையை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *