தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

11/01/2022

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் காளைகளுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்தி வருகிறார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி விமர்சையாக நடைபெறும்.

மதுரை மாவட்டம் ஜனவரி 14 தேதி அவனியாபுரம், ஜனவரி 15 தேதி பாலமேடு, ஜனவரி 16 தேதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆண்டுதோரும் சிறப்பான முறையில் சிறந்த முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டு பொங்கல் நெருங்கும் நிலையில் காளைக்கு

அதன் உரிமையாளர் மதுரை திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் பகுதியில் சேர்ந்த R M நாகலிங்கம் சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறார். குறிப்பாக காளைகளுக்கு நீச்சல், நடை, மண் குத்தும் மற்றும் மூச்சுப் பயிற்சி, வாடிவாசலில் மாடுபிடி வீரர்களை கண்டு மிரளாமல் களத்தில் சீறிப்பாய்வதற்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு காளை யானை வீராவை வளர்த்துவரும் உரிமையாளர் நாகலிங்கம் கூறும்போது, நாட்டு இன மாடுகளை பாதுகாப்பதே எனது நோக்கம். பத்தாண்டுகளுக்கும் மேலாக காளைகளை வளர்க்கிறேன்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒரு மாதம் முன்பாக பயிற்சியை துவங்கி விட்டேன். ‘வீரா’ எனும் காளை ஜல்லிக்கட்டில் வீரர்களை தெறிக்கவிட்டு பல பரிசுகளை வாங்கி வந்துள்ளன.உள்ளூர் மட்டுமின்றி மதுரை, திருச்சி, திண்டுக்கல் , தேனி நடந்த ஜல்லிக்கட்டிலும் இக் காளை வீரர்களை பந்தாடியுள்ளன. சிறப்பு பயிற்சியோடு களத்தில் ‘தெம்பு’டன் நின்று விளையாட தவிடு, புண்ணாக்கு, பருத்தி விதை, வாழைப்பழம், கரும்பு சக்கையை உணவாக கொடுப்பேன். இவை ‘குழந்தை’ மாதிரி சாதுவாக இருந்தாலும், களத்தில் இறங்கி விட்டால் ‘பாயும் புலி’ தான். எந்த வீரரும் நெருங்கவே முடியாது, என்றா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *