தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 பேர் மீது போலீசார் நடவடிக்கை

09-01-2022

தூத்துக்குடி பீச் ரோட்டில் 4 வாலிபர்கள், தங்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றும், சாகசங்கள் செய்தும் வீடியோ பதிவு செய்து இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி மோட்டார் சைக்கிளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாகசம் செய்தவர்களை அடையாளம் கண்டறிந்தனர். அவர்கள் தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்நத ஜெயபால் மகன் மார்ஷல் மோசா (வயது 19), இந்திராநகரை சேர்ந்த தாமஸ் மகன் ஸ்நோவின் (19), முனியசாமிபுரத்தை சேர்ந்த சிவா மகன் பிரவீன் பழனி (20), மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் கனகவேல் (19) என்பதும், அவர்கள் சாகசத்தை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் 4 பேரையும் அழைத்து விசாரணை நடத்தி அபராதம் விதித்தனர். 4 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வதும், பைக்ரேஸ், வீலிங் போன்ற சாகசங்கள் செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *