பாரத பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை

11/01/2022


பாரத பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம், காங்கிரஸ் அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சாக்கோட்டை சதீஷ் குமார் வழிகாட்டுதலின் படி பட்டியல் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஆனது திருப்பனந்தாள் கடைவீதியில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் அணி மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார், மாவட்ட பொது செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார், கல்வியாளர் பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவர் பசும்பொன் பாண்டியன், வர்த்தகப் பிரிவு மாநில செயலாளர் கராத்தே ராஜா, திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார், திருப்பனந்தாள் வடக்கு ஒன்றிய தலைவர் ராதா, குடந்தை வடக்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார், ஊரக மற்றும் உள்ளாட்சித் பிரிவு மாவட்ட தலைவர் மணிமாறன், அமைப்புசாரா பிரிவின் மாவட்ட தலைவர் செல்வராஜ், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

பாரத பிரதமருக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் மகளிர் அணி மற்றும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *