புழல் மாதவரம் செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் மெலிதாக இருக்கிறது கரும்பு
தமிழக அரசால் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் கரும்பு மிகவும் மெலிதாக மூன்று அடி உயரம் கொண்ட கரும்பை பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பொங்கல் தொகுப்பு பரிசாக வழங்கப்படுகிறது பொதுமக்கள் அனைவரும் பொருட்களை வாங்கிச் செல்லும்போது கரும்பை பார்த்தவுடன் ஏன் இப்படி மெலிதாக இருக்கிறது என்று நியாயவிலை கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது நியாயவிலை கடைக்காரர் புழல் பகுதி மாதவரம் செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் இதுபோன்று மெலிதாக தான் எங்களுக்கு கொடுக்கப்பட்டது என்று கூறினார் நியாய விலை கடைகளில் கொடுக்கப்படும் பொருட்களின் தரத்தை உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு அரசின் மீது உள்ள நம்பிக்கையை உண்டாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.