போளூரில் 21,984 வாக்காளர்கள் என தேர்தல் அதிகாரி முகமது ரிஸ்வான் தெரிவித்தார்

28/01/2022

போளூர்=7.47.PM

போளூர் பேரூராட்சியில் நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலையோட்டி தேர்தல் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போளூர் பேரூராட்சியில் நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. போளூர் பேரூராட்சியின் தேர்தல் அதிகாரியாக செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போளூர் பேரூராட்சியில் மொத்த வாக்காளர்கள் மொத்தம் 21984 பேர் அதில் ஆண் வாக்காள 10365 பேர், இதில் பெண் வாக்காளர்கள் 11620, மூன்றாம் பாலினம் வாக்காளர் ஒருவர் ஆகும்.

போளூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் ஆண்களுக்கு என ஒதுக்கப்பட்ட வார்டு-8 பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட வார்டு-9 இதில் 1 வார்டு தனி வார்டு (ரிசர்வேஷன்) அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 18 வார்டுகளில் அதிகளவு வாக்காளர் கொண்ட வார்டு18&வது குறைந்த வாக்காளர்களை கொண்ட வார்டு 13-வது வார்டு ஆகும்.

மொத்த வாக்குச்சாவடி மையங்கள் 30 ஆகும் இதில் ஆண்களுக்கு என 12 வாக்கு சாவடி மையங்கள், பெண்களுக்கு 12 வாக்குச்சாவடி மையங்கள், பொதுவான வாக்குச்சாவடி மையங்கள் 6எனவும் மொத்தம் 30 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தகவலை போளூர் பேரூராட்சியின் தேர்தல் அதிகாரியும், போளூர் பேரூராட்சி செயலாளருமான முகமது ரிஸ்வான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *