மாதவரம் துணை ஆணையாளர் மேற்பார்வையில் காவல் மற்றும் ஆளிநர்கள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தடுப்பு விழிப்புணர்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், அவர்கள் உத்தரவின்பேரில், மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் சுந்தரவதனம் அவர்கள் மேற்பார்வையில், காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் மாதவரம் காவல் மூலக்கடை, புழல் GNT சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், திரவ சுத்திகரிப்பானை உபயோகித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *