வாணியம்பாடியில் பைக்கில் கொண்டு சென்ற ரூ.69 ஆயிரம் பறிமுதல்

28/01/2022

வாணியம்பாடி=8.34.PM

வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 69 ஆயிரத்து 800 தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் நகரப்பகுதியில் 3 பறக்கும் படை அமைத்து அந்த குழு பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாணியம்பாடி புதூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பெரியபேட்டையைசேர்ந்த வடிவேல் என்பவர் உரிய ஆவணம் இன்றி பைக்கில் ரூ.69,800-ஐ எடுத்து சென்றார். பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். நகராட்சி தேர்தல் அலுவலர் ஸ்டான்லி பாபுவிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *