வேலூர் மாவட்டம் சேவூர் ஊராட்சியில் அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகள்நிறைவு விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் ஊராட்சியில் அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜேந்திரன் அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படத்திற்கும் புரட்சித்தலைவி ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அதிமுக கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்கள் இவருடன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முனுசாமி கூட்டுறவு சங்கத் தலைவர் ரவி கிளை செயலாளர்கள் மூர்த்தி. சகாயராஜ். மற்றும் அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

வேலூர் மாநகரம் அதிமுக சார்பில் 50வது ஆண்டு விழா முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் பகுதி செயலாளர் ஜனார்த்தன் தலைமையில் முன்னிலை கிளை செயலாளர் எம் ஜி ராமச்சந்திரன் . வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் கே அப்பு அவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இவருடன் எம்ஜிஆர் மன்ற பகுதி செயலாளர் ஏ குமார் அண்ணா. தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் கே.பி.ஆனந்தன். அண்ணா தொழிற்சங்க செயலாளர் ரவி மற்றும் அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் வேலூர் மாவட்ட மக்கள் நம்பிக்கை காலை நாளிதழ் இணையாசிரியர் கே.என்.லிங்கம்

வேலூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் ஒன்னாவது மண்டலம் காட்பாடி 8வது வார்டில் சுப்பிரமணி அவர்கள் தலைமையில் அதிமுக 50ஆவது ஆண்டு விழாவை மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினார்கள் இவருடன் முன்னாள் கவுன்சிலர் இளவரசி ஏழுமலை. எம்ஜிஆர் மன்ற அவைத்தலைவர் ராஜேந்திரன். தங்கவேலு. முன்னாள் கவுன்சிலர் தேவிகா. மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் வேலூர் மாவட்ட மக்கள் நம்பிக்கை காலை நாளிதழ் இணைய ஆசிரியர் கேஎன் லிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *