செய்தி: தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை மாதம் 24/11/23 வெள்ளி கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை மாதம் 24/11/23 வெள்ளி கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர்க்கும் ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்து தீபாராதனைகளும் நடைபெற்றது உலக
அமைதிக்காக கூட்டு வழிபாடும் தேவாரம், திருவாசகம் பக்தர்கள் பக்தியுடன்பதிகம் பாடி இறை வழிபாடு செய்தனர் இங்கு தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள் மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் வந்து தரிசனம் செய்தார்கள் பிரதோஷ கட்டளைதாரர் பெரியகுளம் திருசிங்கபெருமாள் மீனாட்சி பைனாஸ்சியர் அவர்கள் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்து இருந்தனர். 26.11.2023 ஞாயிற்றுகிழமை பெளர்ணமி கிரிவலம் சிறப்பான அன்னதானம் நடைபெறும் மகா கார்த்திகை தீபத் திருவிழா நிகழ்ச்சி காலையில் கொடியேற்றுதல் மகாதீபாரதனையும் பிரசாதமும் வழங்கப்படும் மாலை 6.15 மணியளவில் பாலதீபம் ஏற்றி மகா தீபம் ஏற்றுதல் காலையில் இருந்தே பிரசாதமும், அன்னதானமும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பக்த கோடிகள் அனைவரும் கலந்துகொண்டு எம்பெருமான் கைலாசநாதர் திரு அருள்பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு , சார்பகவும் கோயில் நிர்வாகத்தின் சார்பாகவும் அழைக்கின்றோம் அனைவரும் வருக இறையருள் பெருக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *