செய்தி: மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை அமைச்சர் சு முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு ஆயத்த தீர்வைத் துறை அமைச்சர் சு முத்துசாமி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா இ. ஆ. ப., ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *