61வது காவல் துறையினருக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை காவல் விளையாட்டு அணியினரை நேரில் அழைத்து பாராட்டினார்

11/01/2022

கடந்த 06.01.2022 முதல் 08.01.2022 வரை, திருச்சியில் நடைபெற்ற 61வது
மாநில அளவிலான காவல் துறையினருக்கான விளையாட்டு போட்டியில் சென்னை
பெருநகர காவல் துறையினர் கலந்து கொண்டு 48 பதக்கங்களை பெற்று ஒட்டு
மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்,
அவர்கள்(10.01.2022) மாலை மாநில அளவிலான காவல் துறையினருக்கான
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சென்னை பெருநகர
காவல் விளையாட்டு அணியினரை நேரில் அழைத்து பாராட்டி குழுப்புகைப்படம்
எடுத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்)
முனைவர்.J.லோகநாதன், இணை ஆணையாளர் (தலைமையிடம்)
திருமதி.B.சாமுண்டீஸ்வரி, இ.கா.ப, துணை ஆணையாளர் திரு.L.பாலஜிசரவணண்,
(தலைமையிடம்), திரு.சௌந்திரராஜன் (ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும்
காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *